திருப்பதி:

நீட் விவகாரத்தில் மாணவர்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் பா.ஜ.விற்கு காலம் பதில் செல்லும் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தியபோது அதற்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகர்களில் நடிகர் ராகவா லாரன்ஸும் ஒருவர். ஆனால் தற்போதைய நீட் எதிர்ப்பு போராட்டங்கள் குறித்து ஏதும் பேசாமல் இருந்தார்.

இந்த நிலையில் திருப்பதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்த லாரனஸ் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ நீட் குழப்படிகளால் மாணவி அனிதா உயிரிழந்துவிட்டார். இது போன்ற சம்பவம் இனி நடைபெறாமல் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை விலக்கக் கோரியும் தமிழகத்தில் மாணவர்கள் உணர்ச்சிகரமாக போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டத்தை பா.ஜ.க. கொச்சைப்படுத்துகிறது. இதற்கு அக் கட்சி பதில் சொல்ல வேண்டிய காலம் வரும்” என்றும் ராகவா லாரண்ஸ் தெரிவித்தார்.