சென்னை: வெள்ளியன்று (மார்ச் 27) அதிகாலை 3.30 மணிமுதல் காலை 9 மணி வரை மட்டுமே பால் விநியோகம் செய்யப்படும் என்று பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர் நலச்சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஆவின் பால் காலை முதல் இரவு வரை தட்டுப்பாடின்றி கிடைக்கும் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாளை(வெள்ளி) அதிகாலை 3.30 மணி முதல் காலை 9 மணி வரை மட்டுமே பால் விநியோகம் செய்யப்படும். பால் முகவர்களின் கடைகளில் பால் விற்பனை நேரம் குறைக்கப்படும். சில்லறை விற்பனை கடைகளுக்கு பால் விநியோகம் செய்யப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் உள்ள ஆவின் பாலகத்தில் காலை முதல் இரவு வரை பால் தட்டுப்பாடின்றி கிடைக்கும் எனவும், பால் தட்டுப்பாடு ஏற்படுமோ என மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மார்ச் 27ம் தேதியன்று கோயம்பேடு மார்க்கெட் செயல்படாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மக்கள் நலன் கருதி நாளை கோயம்பேடு மார்க்கெட் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.