சென்னை

ரும் 16 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் இன்னும் 2 தினங்களுக்கு வானம் மேக மூட்டத்துடனும் சில இடங்களில் மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.  குறிப்பாக இன்று முதல் 3 நாட்களுக்குக் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

மேலும் வரும் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் தென் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மிதமான மழையும் வட மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.  தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.

சென்னை நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்ப நிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலை 25 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.