சென்னை

சென்னை வானிலை ஆய்வு மைய வரும் 26 ஆம் தேதி வர தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது

அதில்,

”தற்போது லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.

இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வருகிற 26-ந் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த அக்டோபர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 20-ந் தேதி (நேற்று) வரையிலான காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 45 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. இயல்வை விட இது 6 சதவீதம் அதிகம் ஆகும்”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.