பாகுபலி அனல் இந்தியா முழுதும் வீசிக்கொண்டிருக்கிறது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் அருகே நந்தன் கண்ணன் வனவிலங்கு பூங்கா உள்ளது. இங்குள்ள மேகா, விஜயா, சினேகா ஆகிய புலிகள் சமீபத்தில் ஏழு குட்டிகளை ஈன்றன. இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என வனவிலங்கு அதிகாரிகள் பார்வையாளர்களிடம் கேட்டிருந்தனர். இதற்காக வனவிலங்கு பூங்காவி்ல் ஒரு பெட்டி வைத்து அதில் பூங்காவிற்கு வருபவர்கள் தாங்கள் விரும்பிய பெயர்களை எழுதி போடலாம் என்று அறிவித்திருந்தனர்.

நேற்று முன்தினம் (10.05.17) பெட்டியை திறந்து பார்த்தனர்.  அதில் நிறைய பேர்  எழுதியிருந்த பேர்.. பாகுபலி!

மற்ற புலிக்குட்டிகளுக்கு குந்தன், அடியஷா, சாஹில், விக்கி, சினு, மவுசுமி ஆகிய பெயர்கள் சூட்டப்பட்டன. இதற்கான விழாவில் ஒடிசா மாநில வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பிஜய்ஸ்ரீரவுத்ரி கலந்து கொண்டார்