சென்னை

மிழகத்தில் 23 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் மழை பெய்யலாம் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தற்போது தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தவிர தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  இதனால் அப்பகுதிகளில் 7-ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

வரும் 8ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப் பெறக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

இந்த நிலையில் அடுத்த 3 மணிநேரத்தில் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, நெல்லை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், ஈரோடு, ஆகிய 23 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.