டோக்கியோ: 
2020 டோக்கியோ பாராலிம்பிக் போட்டியின் அதிகாரப்பூர்வ பங்குதாரராக  தாம்ஸ் அப்  மாறியுள்ளது.
இதுகுறித்து கோகோ கோலா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  உலகளாவிய கோலா நிறுவனமான கோகோ கோலாவுக்கு சொந்தமான நிறுவனம் தாம்ஸ் அப்.
ஆகஸ்ட் 24-செப்டம்பர் 5 முதல் நடைபெற உள்ள டோக்கியோ 2020 பாராலிம்பிக் போட்டிகளுடன் அதிகாரப்பூர்வ பங்குதாரராக தாம்ஸ் அப் மாறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டோக்கியோவில் சமீபத்தில் முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் தம்ப்ஸ் அப் ஒரு  பங்குதாரராகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து  கோகோ கோலா இந்தியா மற்றும் தென்மேற்கு ஆசியாவின் துணைத் தலைவரும் சந்தைப்படுத்தல் தலைவருமான அர்னாப் ராய் கூறுகையில், எங்கள் நிறுவனம், 1928 முதல் ஒலிம்பிக் போட்டிகளுடன் நீண்ட தொடர்பைக் கொண்டுள்ளது. கோகோ கோலா நிறுவனம் உலகெங்கிலும் உள்ள முக்கிய விளையாட்டு நிகழ்வுகளுக்கு ஸ்பான்சர் செய்து பெரிய வரலாற்றைப் படைத்துள்ளது என்று கூறினார்.