சென்னை: சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் உதயநிதிக்கு மிரட்டல்கள் அதிகரித்து வரும் நிலையில், அவருக்கு மற்றும் அவரது வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட உள்ளது.

தமிழ்நாட்டில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அனைத்து கட்சிகளும் கடுமையாக சாடி உள்ள நிலையில், நாடு முழுவதும் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும் மிரட்டல்களும் விடுக்கப்பட்டு வருகிறது. அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ. 10 கோடி கொடுப்பதாக அறிவித்து உள்ளார்.

இதையடுத்து,  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குடியிருந்து வரும்  பசுமை வழிச்சாலை வீடு  மற்றும் நீலாங்கரையில் உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  வழக்கமாக சுழற்சி முறையில் ஒரு காவலர் பாதுகாப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.