சென்னை: 
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான  34வது கட்ட விசாரணை நாளை துவங்க உள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. நீதிபதி அருணா ஜெகதீசன் தூத்துக்குடியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.
33 ஆவது கட்ட விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து  34வது கட்ட விசாரணை நாளை முதல் 30ம்தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர், முன்னாள் வருவாய் அலுவலர், இணை காவல் கண்காணிப்பாளர் உட்பட 9 பேருக்கு விசாரணைக்கு ஆஜராகச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.