சென்னை:  திருவள்ளுவர் தினத்தையொட்டி, சென்னை வள்ளுவர்கோட்டத்தில் உள்ள  திருவள்ளுவர் சிலைக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் இன்று திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்படுகிறது.  இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் திருவள்ளுவர் சிலை மற்றும் திருவள்ளுவர் உருவப்படுங்களை மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  இன்று காலை சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து அமைச்சர்கள், அதிகாரிகள் மரியாதை செய்தனர்.

இதைத்தொடர்ந்து, வள்ளுவர் கோட்டை சுற்றிப்பார்த்த முதலமைச்சர், அங்குளள்ள அதிகாரிகளுடன் பராரிப்பு குறித்து கேட்டறிந்தார்.