மதுரை: திருமயம் திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆலவயல் வ.சுப்பையா  நேற்று (ஞாயிற்றுக் கிழமை) இரவு மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறுகிறது.

.புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயலை சார்ந்தவர் வ.சுப்பையா (வயது 69).  இவர் திருமயம் சட்டமன்ற தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்.  வயது முதிர்வு  காரணமாக பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்ற வந்த நிலையில், நேற்று இரவு மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது இறுதிசடங்கு ஆலவயல் இல்லத்தில் இன்று மாலை நடைபெற உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.

இவர்  1989ம் ஆண்டு திருமயம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு  மக்கள் பணியாற்றினார்.

அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.