திருச்செந்தூர்: திருப்பதி போல் திருச்செந்தூர் கோவிலின் உள்கட்டமைப்பு வசதி ரூ.20 கோடியில் மேம்படுத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை காலடிப்பேட்டையில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான கல்யாண வரதராஜர் பெருமாள் கோயிலில் இந்து சமய அறநிலையதுறை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, “திருச்செந்தூருக்கு அதிகளவில் பக்தர்கள் வருவதால் 200 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பதி கோயிலுக்கு நிகராக திருச்செந்தூர் கோயிலின் உட்கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என்றார்.

திருச்செந்தூரில், ஒரே நேரத்தில் 5000 பக்தர்கள் வந்தால் அவர்களை வரிசையாக அனுப்புவதற்கு பிரத்யேக ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியவர், அதைத்தொடர்ந்து,   திருத்தணி, சமயபுரம் ,ராமேஸ்வரம், பழனி போன்ற ஊர்களில் உள்ள திருக்கோவில்களிலும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என கூறினார்.