சிவபெருமானுக்கு இந்த பொருட்களைப் படைக்கவே கூடாது..!!

சிவனுக்குப் படைக்கக் கூடாத பொருட்கள் குறித்துப் பரவி வரும் வாட்ஸ்அப் பதிவு

சிவனுக்குப் படைக்கக்கூடாத பொருட்கள் எவை தெரியுமா…?

சிவபுராணத்தின்படி, ஒரு தீவிர பக்தன் சிவபெருமானின் அடையாளமான சிவலிங்கத்திற்குப் பின்வரும் இந்த ஐந்து பொருட்களைப் படைக்கக்கூடாது. அப்படிச் செய்தால் மோசமான விளைவுகளைச் சந்திக்கக்கூடும்.

தாழம்பூ :

🌷 ஒருமுறை பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் யார் பெரியவர்? என்ற சண்டை எழுந்தபோது, சிவன் ஜோதி லிங்கமாய் தோன்றி, தன்னுடைய முதலான தலையை அல்லது முடிவான காலை யார் கண்டுபிடிக்கிறார்களோ அவரே பெரியவர் என்று சொல்கிறார். அதன்படி விஷ்ணு காலை நோக்கியும், பிரம்மா தலையையும் நோக்கித் தேடிச் செல்லும்போது, இருவராலும் கண்டுபிடிக்க இயலவில்லை.

🌷 இந்நிலையில் ஆதியைத் தேடி மேலே சென்று கொண்டிருந்த பிரம்ம தேவன் தன்னுடன் சேர்ந்து கொண்டு பொய் சொல்லுமாறு தாழம்பூவைக் கேட்டுக் கொண்டார். இருவரும் திரும்பியவுடன், விஷ்ணு தேவன் தன் தோல்வியை ஒத்துக் கொண்டார். ஆனால் பிரம்ம தேவனோ ஆதியைக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறினார். அவருக்குச் சாதகமாகத் தாழம்பூவும் பொய் சொல்லியது.

🌷 இந்த பொய்யினால் கோபம் கொண்ட சிவபெருமான், பிரம்ம தேவனின் ஒரு தலையை வெட்டினார். அவரை யாரும் வணங்க மாட்டார்கள் என சாபமும் விட்டார். சிவலிங்கத்தை வழிபட இனி இந்த மலரை யாரும் பயன்படுத்த மாட்டார்கள் என தாழம்பூவை பார்த்து சபித்தார். அதிலிருந்து தாழம்பூவினால் சிவனுக்குப் பூஜை செய்வதில்லை.

துளசி :

🌿 எந்த கடவுளாலும் தன்னை வெல்ல முடியாதபடி ஒரு வரத்தை விஷ்ணுவிடமிருந்து ஜலந்தர் என்னும் அசுரன் பெற்றான். அவனுடைய அட்டூழியத்தைத் தாங்க முடியாமல் சிவன் அவனைக் கொன்று சாம்பலாக்கினார். ஜலந்தரின் மனைவியான துளசி தன் கணவனின் மரணத்தால் ஏற்பட்ட வருத்தத்தாலும், ஏமாற்றப்பட்ட கோபத்தாலும் இனி சிவபெருமானை இறைத்தன்மையுள்ள தன் இலைகளைக் கொண்டு யாரும் வழிபடக்கூடாது எனச் சாபமிட்டார். இதன் காரணமாகத் துளசியைச் சிவனுக்குப் படைப்பதில்லை.

தேங்காய் நீர் :

🍹 சிவபெருமானுக்குத் தேங்காய்களைப் படைத்தாலும், தேங்காய் தண்ணீரைக் கொண்டு எப்போதும் சிவபெருமானை வழிபடக்கூடாது. சிவலிங்கத்தின் மீது படைக்கப்படும் அனைத்தும் புனிதமானதாகக் கருதப்படுவதால், அதனை அதற்குப் பிறகு உண்ணவோ, பருகவோ கூடாது. தேங்காய் தண்ணீரைக் கடவுளுக்குப் படைத்தால், அதனைக் கட்டாயமாகப் பருக வேண்டும் என்பதால், சிவலிங்கத்தின் மீது அதனைப் படைப்பதில்லை.

மஞ்சள் :

🔶 புனிதமான மஞ்சள் பொடியை எப்போதும் சிவலிங்கத்திற்குப் பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால் மஞ்சள் என்பது பெண்களின் அழகை மேம்படுத்தப் பயன்படுத்தப்படுவது. சிவலிங்கம் என்பது சிவனின் அடையாளம் என்பதால் அதையும் பயன்படுத்தக்கூடாது.

குங்குமம் :

🔴 திருமணமான பெண்கள் குங்குமத்தைப் புனிதமாகப் பார்க்கின்றனர். தன் கணவர் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டுமென அதனை பெண்கள் நெற்றியில் இட்டுக் கொள்வார்கள். ஆனால், சிவபெருமான் அழிக்கும் கடவுள் என்பதால், குங்குமத்தைக் கொண்டு அவரை வழிபடுவது புனிதமற்றதாக கருதப்படுகிறது.