தில்லை காளி கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் நகரின் புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ளது.

1229 மற்றும் 1278க்கு இடைப்பட்ட சோழ மன்னர் கோப் பெருஞ்சிங்கனால் கட்டப்பட்டது. சிதம்பரத்தின் புறநகர்ப்பகுதியில் இந்த கோயில் உள்ளது.

தெய்வமாகிய காளி தேவியின் சிவபெருமானிடம் நாட்டிய போட்டியில் தோற்றபிறகு தேவி இங்கு சென்றார் என்று புராணக்கதை கூறுகிறது. ‘’சிவம்’ (சிவன்) அல்லது சக்தி (பார்வதி) யார் மேலானவர் என்று ஒரு வாதம். இதனால் சிவன், விஷ்ணு, பிரம்மா மற்றும் பிற தெய்வங்களின் முன் சிதம்பரத்தில் ஒரு நடன நிகழ்ச்சி நடத்தினார். அவர்கள் நடனம் ஆடுகையில், சிவன் தோற்கடிக்கப்பட விருந்தார்.

ஆனால் சிவன் ருத்துர தாண்டவம் ஆடினார். அதாவது அவரது தலைக்கு மேலே ஒரு கால் உயர்த்தினார். இந்த “ருத்துரதாண்டவம்” நடனத்தில் ஒன்றாகும். பெண்களின் தாழ்மையும், கூச்சமும் காரணமாக பெண்கள் இந்த நடனம் ஆட முடியாது.

பார்வதிக்கு இந்த தோரணையில் சமமாக நன்றாக நாட்டியம் ஆட முடியவில்லை மற்றும் அவரது தோல்வியை ஒப்புக்கொண்டார். அவளது அகந்தையைக் கட்டுப்படுத்தவும் சிவம் மற்றும் சக்தி இருவருமே நம் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்தவா்கள் என ஒரு பாடம் கற்பிக்கவும் நகரத்தின் எல்லைகளுக்கு வெளியே செல்ல வேண்டியிருந்தது.

‘தில்லை காளி’ கோபத்தின் ஒரு தெய்வம். இந்த கோபம் பிரம்மாவின் வேதம் கற்பிப்பதன் மூலமும் காளியின் புகழ் பாடர்களாலும் சமாதானப்படுத்தப்பட்டது. பிரம்மா ‘காளி’ தவம் இருந்த காரணத்தால் காளி சாந்தம் ஆனார். எனவே, இந்த கோவிலில் அம்மன் தெய்வம் நான்கு முகங்களுடன் காட்சியளிக்கிறது.