ஹசன்:
ர்நாடக மாநிலம் ஹாசனில் ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள தக்காளிகள் திருடு போனதாக பெண் விவசாயி ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

தக்காளி விலை நாடு முழுவதும் உயர்ந்துள்ள நிலையில், பெங்களூருவில் கிலோவுக்கு ரூ.101 முதல் 121 வரை விலை உள்ளது.

கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் விவசாயி தாரிணி மற்றும் அவரது குடும்பத்தினர் இரண்டு ஏக்கர் நிலத்தில் தக்காளியை பயிரிட்டு, அடுத்த வாரம் விளைச்சலை சந்தைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள தக்காளிகள் திருடு போனதாக தாரிணி போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து தாரிணி செய்தியாளர்களிடம் கூறும்போது, “பருப்பு அறுவடையில் பெரும் நஷ்டத்தை சந்தித்தோம். தக்காளி பயிரிட கடன் வாங்கியுள்ளோம். எங்களிடம் நல்ல அறுவடை கிடைத்தது. தற்செயலாக, விலையும் அதிகமாக இருந்தது. 50-60 தக்காளி மூட்டைகளை எடுத்துச் சென்றதைத் தவிர, எஞ்சியிருந்த பயிரையும் திருடர்கள் அழித்துவிட்டனர்.

இதுகுறித்து தாரிணி அளித்த புகாரின் பேரில் ஹளேபீடு காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து ஹளேபீடு காவல் நிலைய போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “எங்கள் காவல் நிலையத்தில் இதுபோன்ற வழக்கு பதிவு செய்யப்படுவது இதுவே முதல் முறை” என்றார்.