சென்னை:
திமுகவில் சசிகலாவை மீண்டும் இணைப்பதற்கான வாய்ப்பே இல்லை என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அதிமுகவில் சசிகலாவை மீண்டும் இணைப்பதற்கான வாய்ப்பே இல்லை என்றும், சசிகலா குறித்த ஓபிஎஸ் கருத்து தனிப்பட்டது. அரசியல் என்பது வேறு தனிப்பட்ட முறையில் யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை; அரசியல், பொதுப்பிரச்னையில்தான் வேறுபாடு உள்ளது என்றும் கூறினார்.