சேலம்:
ப்ரல் 6ல் உலகில் உயரமான முருகன் சிலை சேலத்தில் திறக்கப்பட உள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உலகிலேயே மிக உயரமான (146 அடி) முருகன் சிலை வரும் 6ம் தேதி திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்துாரைச் சேர்ந்த முத்துநடராஜன் 2015ல் புத்திரகவுண்டன்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே மலேஷியாவில் உள்ள முருகன் சிலையை போன்று அமைக்க முடிவு செய்தார்.

மலேஷியாவில் சிலை வடிவமைத்த திருவாரூரைச் சேர்ந்த ஸ்தபதி தியாகராஜன் 50, அழைத்து வந்து உலகில் பெரிய முருகன் சிலையை 3 கோடி ரூபாயில் கட்ட முடிவு செய்தார்.தொடர்ந்து 2016 செப்., 6ல் பூமிபூஜை போட்டு பணி துவங்கியது. 2018ல் முத்துநடராஜன் உடல் நலக்குறைவால் இறந்தபோதும் அவரது மகன்கள் ஸ்ரீதர் 50, வசந்தராஜன் 55, ஞானவேல் 52, மகள் பத்மாவதி 50, ஆகியோர் பணியை தொடர்ந்தனர்.

இந்த சிலை வடிவமைப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளதை அடுத்து,  ஏப்ரல் 6ல் உலகில் உயரமான முருகன் சிலை சேலத்தில் திறக்கப்பட உள்ளது.