தாஞ்சவூர்:
குறுவை சாகுபடிக்காக கல்லணை இன்று திறக்கப்படுகிறது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களின் குறுவை பாசனத்திற்காக கல்லணையில் இருந்து இன்று மாலை தண்ணீர் திறக்கப்படுகிறது. திறக்கப்படும் தண்ணீர் மூலம் சுமார் 4 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.

இந்த நிகழ்ச்சியில் நான்கு அமைச்சர்கள், ஐந்து மாவட்டகளின் சட்ட மன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சி தலைவர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.