சென்னை:
மிழகத்தில் உள்ள கோவில்களில் அடுத்த வாரம் முதல் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்களை மீட்டு எடுப்பதிலிருந்து, வெளிநாட்டுக்குக் கடத்தி செல்லப்பட்ட சிலைகளை மீட்டெடுப்பது வரை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து, இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள கோவில்களில் அடுத்த வாரம் முதல் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், முதல்கட்டமாகச் சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் புதன் அல்லது வியாழக்கிழமை தமிழ் அர்ச்சனை தொடங்கப்படும் என்றும் அன்னைத் தமிழில் அர்ச்சனை என்ற பெயர்ப் பலகை வைக்கப்பட்டு, அதில் அர்ச்சகர் பெயர் மற்றும் தொலைப்பேசி எண் குறிப்பிடவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.