சென்னை:

சிஸ்டம் சரியில்லை என்று பேசிய ரஜினிக்கு, அமைச்சர் செல்லூர் ராஜு பதில் அளித்துள்ளார். அதில்,  எங்கள் ஆட்சியில் சிஸ்டம் சரியாகவே உள்ளது என்று கூறினார்.

ராகவேந்திரா திருமண மண்டபத்தில்க டந்த 6 நாட்களாக நடைபெற்று ரஜினி ரசிகர்களுடனான சந்திப்பு நேற்று முடிவடைந்தது.

நேற்று தென்சென்னை மாவட்ட ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். முன்ன தாக   ரசிகர்கள் மத்தியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், நான் அரசியலுக்கு வருவது உறுதி. வரும் சட்டமன்ற தேர்தலில் நான் தனிக்கட்சி தொடங்குவேன்.  234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவேன்.  காலம் குறைவாக உள்ளதால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியில்லை என கூறியிருந்தார்.

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள ரஜினியின் அறிவிப்பு க்கு அமைச்சர்  செல்லூர் ராஜூ  பதில்க அளித்து கூறியுள்ளதாவது:

தமிழக அரசின் சிஸ்டத்தில் எந்த விதமான பிரச்சனையும் இல்லை. எங்கள் அரசில் சிஸ்டம் மிகவும் நன்றாகவே செயல்படுகிறது. எந்த சிஸ்டத்தில் பிரச்சனை என்று கூறுங்கள். தவறான சிஸ்டத்தை சரி செய்து மாற்றிக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.