டெல்லி: தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில், நிறுவனங்கள் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு  தேர்தல் நிதிகள் வழங்கி உள்ளது என்பது தொடர்பான தேர்தல் பத்திர எண்களை வெளியிட ஸ்டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி, கடந்த . 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2024ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி வரையில் மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. 337 பக்க ஆவணத்தில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்களின் விபரங்களும், 426 பக்கங்களில் அதனை பணமாக மாற்றிய கட்சிகளின் விபரங்களும் அடங்கியுள்ளன. இதில், 22,030 தேர்தல் பத்திரங்கள் அரசியல் கட்சிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. 187 பத்திரங்கள் பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த ஆவணங்களில், எந்தெந்த நிறுவனங்கள் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு நிதிகள் வழங்கியது என்பது தொடர்பான விவரங்கள் இடம்பெறவில்லை. அதாவத, தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்த ஸ்டேட் வங்கி, ஒவ்வொரு தேர்தல் பத்திரத்துக்கும் உள்ள எண்களை குறிப்பிடவில்லை தேர்தல் பத்திர எண்களை வெளியிடாததால் எந்த நிறுவனம் வழங்கிய நன்கொடை எந்த கட்சிக்கு சென்றது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இது அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கின் இன்றைய விசாரணையின்போது, இதுதொடர்பாக  முத்த காங்கிரஸ் தலைவரும், வழக்கறிஞருமான கபில்சிபல், உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.

அப்போது நீதிபதிகள், தேர்தல் பத்திரங்கள் வாங்கிய தேதி, வாங்குபவரின் பெயர் மற்றும் மதிப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் வெளியிடப்பட வேண்டும் என்று அரசியல் சாசன அமர்வு தெளிவுபடுத்தியதாகவும்,  ஆனால், எஸ்பிஐ தேர்தல் பத்திரங்களை (தனிப்பட்ட எண்ணெழுத்து எண்கள்) வெளியிடவில்லை என உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து,  தேர்தல் பத்திர எண்களை வெளியிட SBI-க்கு உச்சநீதிமன்றம் மீண்டும் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.  இதுதொடர்பாக நீதிமன்றம் எஸ்பிஐக்கு மார்ச் 18 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் நோட்டீஸ் அனுப்பியது.

மேலும், விசாரணையின்போது,   இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட தரவுகளை திரும்ப அளிக்க ECI  தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை   உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது. மேலும், ஆவணங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்படுவதை உறுதி செய்ய உச்ச நீதிமன்றத்தின் பதிவாளர் நீதித்துறை அதிகாரி, பயிற்சி முடிந்ததும் அசல் ஆவணங்கள் ECI க்கு திரும்பக் கொடுக்கப்படும், பின்னர் அது மார்ச் 17 அல்லது அதற்கு முன் இணையதளத்தில் பதிவேற்றப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, மத்திய பாஜக அரசு, தேர்தல் பத்திரம் திட்டம், கடந்த 2017-18-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில்  அறிவித்தது, தொடர்ந்து,  இந்த திட்டம் கடந்த 2018-ம் ஆண்டில் அமலுக்கு வந்தது. இதன்படி பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன.  2019ம்  ஆண்டு ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட வங்கி கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும். பொதுவாக ஒரு மாதத்தில் 10 நாட்களுக்கு மட்டுமே தேர்தல் பத்திரங்கள் வழங்கப்படும். எனினும் தேர்தல் காலத்தில் மட்டும் ஒரு மாதத்தில் 30 நாட்கள் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.

தனிநபர்கள், நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். ஒரு நபர், நிறுவனம் எத்தனை பத்திரங்களை வேண்டுமானாலும் வாங்கலாம். இந்த பத்திரங்களில் வாங்குபவரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் இருக்காது. 15 நாட்களுக்குள் பத்திரத்தை பணமாக மாற்ற வேண்டும். இல்லையெனில் தேர்தல் பத்திரங்களின் தொகை பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும்.

பாஜக அரசு கொண்டு வந்த இந்த  தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், பாஜகவுக்கு ஆதரவான திட்டம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்த திட்டத்தை ரத்து செய்யக் கோரி ஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. கடந்த 6 ஆண்டுகளாக விசாரணை நீடித்தது.

2023ம்   ஆண்டு முதல் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அரசியல் சான  அமர்வு வழக்கை விசாரித்து வந்தது. இந்த வழக்கில், 2024 பிப்ரவரி 15ந்தேதி உச்சநீதிமன்ற அரசியல் சாசதன அமர்வு பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானது எனக் கூறி அவற்றை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை வங்கிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த உத்தரவில், “தேர்தல் பத்திர முறை மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. தேர்தல் பத்திர நன்கொடைக்காக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது சட்டவிரோதம். தற்போதைய விதிகளின்கீழ் தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமாக உள்ளது.

தேர்தல் பத்திர முறை, தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் அரசியல் சாசன பிரிவு 19(1) ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளது. தேர்தல் பத்திர முறை திட்டத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றால் அதனை ரத்து செய்யலாம். கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்சிகளுக்கு நிதி தரும்போது அதற்கு கைமாறு எதிர்பார்க்க வாய்ப்பு உள்ளது. கறுப்பு பணத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தை அடைய தேர்தல் பத்திரங்களைத் தவிர வேறு வழிகள் உள்ளன.

அரசிடம் கணக்கு கேட்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது என்பதை பல தருணங்களில் நீதிமன்றங்கள் சொல்லியுள்ளன. நன்கொடை தருவோர் குறித்த விவரங்களை தெரிவிக்கத் தேவையில்லை என்பது வாக்காளர்களின் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது. எனவே, தேர்தல் நன்கொடை அளிக்க வகை செய்த வருமான வரி திருத்தச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ திருத்தச் சட்டம் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. தேர்தல் பத்திர முறை தொடர்பான மற்ற சட்டத் திருத்த மசோதாக்களும் ரத்து செய்யப்படுகின்றன. தேர்தல் பத்திரம் சட்டம் மட்டுமின்றி, கம்பெனி சட்டத் திருத்த மசோதாவும் ரத்து செய்யப்படுகிறது.

தேர்தல் பத்திர நிதி விவரங்களை வழங்காமல் இருப்பதற்கு உரிய காரணம் தெரிவிக்கப்படவில்லை. 2019ம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்தோர் விவரங்களை எஸ்பிஐ வங்கி வெளியிட வேண்டும். தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட அனைத்து பங்களிப்பின் விவரங்களை மார்ச் 6க்குள் வழங்க வேண்டும். அதேபோல், நன்கொடை கொடுத்தோர் குறித்த விவரங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் ஏப்ரல் 13ம் தேதிக்குள் வெளியிட வேண்டும்” இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, எஸ்பிஐ தரப்பில் மேலும் 3 மாதம் கால அவகாசம் கோரப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், குறிப்பிட்ட  மார்ச் 13ந்தேதி மாலைக்குள்  தேர்தல் பத்திரம் தொடர்பான தரவுகளை இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தது. அதன்படி  அன்றைய தினம் எஸ்பிஐ  தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திரம் தொடர்பான ஆவணங்களை ஒப்படைத்தது.

இதைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி, இந்திய தேர்தல் ஆணையம்   தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த . 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2024ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி வரையில் மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 337 பக்க ஆவணத்தில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்களின் விபரங்களும், 426 பக்கங்களில் அதனை பணமாக மாற்றிய கட்சிகளின் விபரங்களும் அடங்கியுள்ளன. இதில், 22,030 தேர்தல் பத்திரங்கள் அரசியல் கட்சிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. 187 பத்திரங்கள் பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

https://patrikai.com/is-try-to-escape-from-the-corruption-cases-lottery-king-santiago-martin-donated-%e2%82%b91368-crore-electoral-bonds-to-political-parties/