டெல்லி:  பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கி விசாரணைகளை எதிர்கொண்டு வரும்  ‘லாட்டரி கிங்’ சாண்டியாகோ மார்ட்டின், தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சி களுக்கு ₹1368 கோடி நன்கொடையாக வழங்கி உள்ளது தெரிய வந்துள்ளது. ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்கும் நோக்கில், மத்தியில், மாநிலங்களில் ஆட்சி செய்து வரும் ஆளும் கட்சிகளுக்கு நிதிகளை வாரி வழங்கினாரோ என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.  நிதிகளை வாரி வழங்கிய நிறுவனங்களின் விவரம் கீழே பதிவிடப்பட்டுள்ளது.

இந்த தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நிதி பெற்று முதலிடத்தில் பாஜகவும், 2வது இடத்தில் இண்டி கூட்டணியைச் சேர்ந்த  மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், 3வது இடத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுகவும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ECI வெளியிட்ட பட்டியலில், கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளில் 1,300 நிறுவனங்களால் வாங்கப்பட்ட ₹12,155.51 கோடி மதிப்புள்ள பத்திரங்களின் விவரங்கள் தெரிவிக்கப் பட்டுள்ளன. அவற்றில், ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (மார்ட்டின் நிறுவனம்)  ₹1,368 கோடியை வாங்கியது, இது மட்டுமே ₹1,000 கோடியை தாண்டியது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் பத்திரத் தரவுகள் வெளியாகியுள்ள நிலையில், ‘லாட்டரி கிங்’ சாண்டியாகோ மார்ட்டின் தலைமையிலான நிறுவனமான ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் என்று அழைக்கப்படும் நிறுவனம் நன்கொடையாளர்களின் பட்டியலில் முன்னணியில் இருப்பது என்பது தெரிய வந்துள்ளது. இந்த நிறுவனம்தான் ஆயிரம் கோடிக்கும் அதிகமான அளவில் நிதி வழங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது.

பாஜக, காங்கிரஸ், அதிமுக, பிஆர்எஸ், சிவசேனா, டிடிபி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், திமுக, ஜேடி-எஸ், என்சிபி, திரிணாமுல் காங்கிரஸ், ஜேடியு, ஆர்ஜேடி, ஆம் ஆத்மி, சமாஜ்வாடி கட்சி, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு ஆகிய கட்சிகள் தேர்தல் பத்திரங்களை மீட்டெடுத்த கட்சிகள். , பிஜேடி, கோவா ஃபார்வர்ட் பார்ட்டி, மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா, ஜேஎம்எம், சிக்கிம் ஜனநாயக முன்னணி, மற்றும் ஜன சேனா கட்சி போன்றவை அதிகஅளவில் நிதி பெற்றுள்ளன.

தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக லாபம் அடைந்துள்ளது மத்தியில் ஆளும் பாஜக. பாஜக கட்சிக்கு 6,060 கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளது.  அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 1,421 கோடி கிடைத்துள்ளது,  காங்கிரஸ் கட்சியைவிட அதிக நிதி மம்தாவின் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 1,609 கோடி தேர்தல் நிதி கிடைத்துள்ளது. மேலும்,   தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் கே.சி.ஆர். தலைமையிலான பாரதிய ராஷ்ட்ரிய சமிதிக்கு ரூ. 1,214 கோடியும், பிஜு ஜனதா தளம் கட்சிக்கு 775 கோடி ரூபாயும், தமிழ்நாட்டை ஆளும்  திமுக-வுக்கு ரூ, 639 கோடியும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 337 கோடியும் நிதி வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த தேர்தல் பத்திரம் விவகாரம். ரம் மூடி மறைக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவு காரணமாக வெளி வந்துள்ளது. இதில், அதிகபட்ச டோனெஷன் பாஜகவுக்கு கிடைத்துள்ளது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ள தேர்தல் பத்திரம் தொடர்பான தரவுகளில்,  , நன்கொடையாளர்களின் பட்டியலில் ‘லாட்டரி கிங்’ சாண்டியாகோ மார்ட்டின்  முன்னணியில் இருப்பது தெரிய வந்துள்ளது.  அவர் ஏராளமான நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் என பல அமைப்புகளை நடத்தி வரும் நிலையில், அவரது ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை வாரி வழங்கி உள்ளார்.

மார்ட்டீன் மீதான ஏராளமான ஊழல் வழக்குகள் குவிந்துகிடக்கும் நிலையில், அவர் வெளிநாடு தப்பி செல்ல முடியாத வகையில் அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டு, கண்காணிப்பு வளையத்திற்குள் இருக்கிறார்.  அவர்மீது  அமலாக்க துறை வழக்கு பதிவு செய்த விசாரணைகளை நடத்தி வருகிறது. சில வழக்குகளில்  குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையிலும்,,  லாட்டரி அதிபர்  மாட்டின். நிறுவனமான பியூச்சர் கேம்மிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ் நிறுவனம் பல்வேறு காலகட்டங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை நன்கொடையாக வழங்கி உள்ளது.

 மார்ட்டின் மருமகன் – விசிகவின் புதிய துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை…

கோவையில் வசித்து வரும் சான்டியாகோ மார்ட்டின், மியான்மரின் யாங்கூனில் தொழிலாளியாக வாழ்க்கை தொடங்கியதாக கூறப்படுகிறது. அங்கிருந்த  1988 இல்,  இந்தியாவுக்கு வருகை தந்தவர், தமிழ்நாட்டின் கோவை பகுதியில்  ஒரு லாட்டரி நிறுவனத்தை நிறுவி, தற்போது பல்வேறு தொழில்களில் கால்பதித்து இந்திய தொழிலதிபர்களில் ஒருவராக முன்னேறி உள்ளார்.  லாட்டரி சீட்டு தொழிலில் கொடி கட்டிப் பறந்த இவர்மீது நாடு முழுவதும் ஏராளமான வழக்குகள் உள்ளன.

தற்போது 53 வயதாகும்  சான்டியாகோ மார்டின் (53) லாட்டரி சீட்டு தொழிலில்  இன்றளவும் கொடிகட்டி பறக்கிறார்.  பல மாநிலங்களில்   லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதித்தாலும், மேற்குவங்கம், சிக்கிம், அசாம் என்று இந்தியாவின் பல மாநிலங்களில் லாட்டரியில் கல்லா கட்டி, வி.வி.ஐ.பி-யாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

லாட்டரி தொழில் மட்டுமல்லாமல் ஹோமியோபதி மருத்துவமனை, மில்கள், டி.வி சேனல், சினிமா என்று மார்ட்டின் அண்டு கோ அனைத்து துறைகளிலும் வலம் வந்துகொண்டி ருக்கிறது. லாட்டரி விற்பனையில்  முக்கியப் பங்கு வகித்துவருகிறார்.

2019-ம் ஆண்டு லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 2009 – 2010-ம் ஆண்டு காலகட்டத்தில் சிக்கிம் மாநில லாட்டரி விதிகளை மீறி 910 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும், அந்த வருவாயை 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் மாற்றி முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனடிப்படையில் கொச்சி அமலாக்கத்துறையினர் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக மார்ட்டின், அவரது பங்குதாரர் ஜெயமுருகன் ஆகியோர்மீது வழக்கு பதிவுசெய்தனர். மேலும் லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் பல்வேறு கட்டங்களாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி, 457 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும், அசையா சொத்துகளை முடக்கியது.

இவரது லாட்டரி தொழில் மூலம்  ஏப்ரல் 2009 முதல் ஆகஸ்ட் 2010 வரை வடகிழக்கு மாநிலத்திற்கு ₹910 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அமலாக்கத்துறையினரின்  குற்றப்பத்திரிகை குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான, 120 கோடி ரூபாய் மதிப்புள்ள, அசையா சொத்துக்களை, அமலாக்கத் துறையினர் அதிரடியாக முடக்கியுள்ளனர்.  அதனப்டி, 61 வீடுகள், 82 காலி மனைகள்… லாட்டரி அதிபர் மார்ட்டினின் ரூ.1200000000 சொத்துக்கள் முடக்கப்பட்டது.

ED இன் ஆய்வுகள் மே 2023 இல் கோவை மற்றும் சென்னையில் நடத்தப்பட்ட சோதனைகளால் குறிக்கப்பட்டன.  இவரது நிறுவனமான  ஃபியூச்சர் கேமிங்கின்  நிறுவனம், கேரளாவில் சிக்கிம் அரசு லாட்டரிகளை சில்லறை விற்பனை செய்து வருகிறது.

லாட்டரி அதிபர் மார்ட்டின் மீது,  அமலாக்க இயக்குநரகம் (ED) 2019முதல் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பணமோசடி தடுப்புச் சட்டத்தின்) மீறல்களுக்காக நிறுவனத்தை ஆய்வு செய்து வருகிறது. இந்த நிலையிலும், 2019 முதல் 2024 வரை தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் (EBS) எதிர்கால கேமிங் மற்றும் ஹோட்டல் சேவைகளின் பங்களிப்புகள் மொத்தம் ₹1,368 கோடியை நன்கொடையாக வழங்கி உள்ளார்.

மார்ட்டின் இன்னும் ஏராளமான நிறுவனங்களை நடத்தி வருகிறார்.  தன்மீதான ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்கும் வகையில், நன்கொடைகளை அரசியல் கட்சிகளுக்கு வாரி வழங்கி வரும் நிலையில்,   தேர்தல் பத்திரங்கள் முலம் மட்டும் அரசியல் கட்சிகளுக்கு  ₹1368 கோடி நன்கொடை வழங்கி  இருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

SBI மற்றும் EC வெளிப்படுத்திய EBS நன்கொடையாளர்களின் பட்டியலில் ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட மேகா இன்ஜினியரிங் மற்றும் உள்கட்டமைப்பு கணிசமான பங்களிப்பாளராக உருவெடுத்தது, நன்கொடைகள் ₹966 கோடி.

வாங்குபவர்களின் மற்ற பெயர்கள், அப்பல்லோ டயர்ஸ், பார்தி ஏர்டெல், சியட் டயர்ஸ், சிப்லா, டிஎல்எஃப் கமர்ஷியல் டெவலப்பர்கள், டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்டரீஸ், எடெல்விஸ், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், இண்டிகோ, ஐடிசி, ஜிண்டால் குரூப், கெவென்டர், கேய்பீஸ், பிளாக் எண்டர்பிரைசஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் வரிசையை உள்ளடக்கியது. , பிரமல் எண்டர்பிரைசஸ், பிவிஆர், ஸ்பைஸ்ஜெட், சுலா ஒயின்கள், சன் பார்மா, டோரண்ட் பவர், அல்ட்ராடெக் சிமெண்ட், வர்த்மான் டெக்ஸ்டைல்ஸ், வேதாந்தா மற்றும் வெல்ஸ்பன். உள்பட பல நிறுவனங்கள் நன்கொடைகளை வாரி வழங்கி உள்ளது.

சாண்டியாகோ மார்ட்டினின் எதிர்கால கேமிங்கே  தேர்தல் பத்திரங்களை வாங்கி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடுத்தது என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். மார்ட்டின் நிறுவனம் மூலம்,  CPIM, DMK, காங்கிரஸ், TMC ஆகியவற்றுக்கு நிதி வழங்கப்பட்டள்ளதால், அவர்களுடனான மார்ட்டின் நட்பு  அம்பலமாகி உள்ளது.

  ‘லாட்டரி மன்னன்’ என்று அழைக்கப்படும் சாண்டியாகோ மார்ட்டின், கேரளாவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உட்பட பல்வேறு அரசியல் பிரிவுகளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளார். தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி), காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் காட்டி வந்துள்ளார்.

பல மாநிலங்களிலும் பல அரசியல் தலைவர்களுடன் பெரும் நெருக்கம் இவருக்கு இருந்தது. கடந்த 2007 – 2008-ஆம் ஆண்டில் கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிக்கையான தேசாபிமானிக்கு மார்ட்டின் ரூ.2 கோடி நன்கொடை அளித்த விவகாரம் அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குப் பிறகு, அந்தப் பணத்தை கட்சி திருப்பி அளித்ததோடு, தேசாபிமானியின் பொது மேலாளர் இ.பி. ஜெயரஞ்சன் தனது பதவியையும் ராஜினாமா செய்தார்.

2011-இல் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி, மாக்ஸிம் கார்க்கியின் தாய் நாவலை அடிப்படையாக வைத்து கதை – வசனம் எழுதிய ‘இளைஞன்’ படத்தை மார்ட்டினின் மார்ட்டின் புரொடக்ஷன்ஸ் தயாரித்தபோது, அது பற்றியும் சர்ச்சை எழுந்தது.

2011-இல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, கோயம்புத்தூரில் பதிவுசெய்யப்பட்ட ஒரு நில அபகரிப்பு வழக்கில் மார்ட்டினை கைதுசெய்யப்பட்டார். அடுத்த 15 நாட்களில் அவர் குண்டர் சட்டத்திலும் கைதுசெய்யப்பட்டார். தடைசெய்யப்பட்ட லாட்டரியை விற்றது உட்பட ஒட்டுமொத்தமாக 14 வழக்குகள் அவர் மீது தொடுக்கப்பட்டன. பிறகு குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்தது. சுமார் 7 மாதங்கள் சிறையில் இருந்த மார்ட்டின், எல்லா வழக்குகளிலும் ஜாமீன் பெற்று வெளியில் வந்தார்.

இந்தத் தருணத்தில் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஆனந்த வடிவேல் என்பவரும் சென்னையைச் சேர்ந்த செல்வம் என்ற ஹல்வா செல்வமும் தங்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக வும் பணம் தராவிட்டால், வேறு மாநிலங்களில் இருந்து லாட்டரியைக் கடத்திவந்து, தமிழ்நாட்டில் மார்ட்டினின் பெயரில் விற்கப்போவதாகக் கூறுவதாகவும் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் மார்ட்டின் காவல் துறையில் புகார் அளித்தார்.  இவ்வாறு சர்ச்சைக்குரிய மார்ட்டின் நிறுவனத்திடம் அதிக அளவில் நன்கொடை பெற்றுள்ளது பாஜக மற்றும் திமுக என்பதே உண்மை நிலவரம். ஆனால், எதிர்க்கட்சிகளின் விமர்சனம் பாஜகவை மட்டுமே சார்ந்துள்ளது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் அளிக்கப்பட்ட மொத்த நன்கொடைகளில் பாதிக்கு மேல், சுமார் 6,500 கோடி ரூபாய் பாஜகவுக்கு சென்றுள்ளது. இருப்பினும், குறிப்பிடத்தக்க வகையில், ஆளும் பிராந்தியக் கட்சிகளான டிஎம்சி, பிஜேடி மற்றும் திமுகவைப் பொறுத்தவரை, தேர்தல் பத்திரங்கள் மற்ற வகையான நிதியுதவி களில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது. இந்த கட்சிகள் தேர்தல் சமயத்தில் மட்டுமே தேர்தல் பத்திரங்களை நிதியாக வாங்கி குவித்துள்ளன.

தேர்தல் பத்திரம் தீர்ப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் கூறுகையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட நிதி ஆதாரத்தை அறிய மக்களுக்கு உரிமை உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்திய அரசியல் கட்சி ஒன்று இல்லாமல் போய்விடும் என்று நாங்கள் உணர்கிறோம் என்று விமர்சனம் செய்தது.

மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருக்கும் டிஎம்சி, 2017-18 முதல் ஆண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் எதையும் பெறவில்லை, பின்னர் 2018 இல் ரூ.97 கோடி. -19, 2019-20ல் ரூ.100 கோடி, 2020-21ல் ரூ.42 கோடி, 2021-22ல் ரூ.528 கோடி, 2022-23ல் ரூ.325 கோடி. டிஎம்சியின் மொத்த நன்கொடைகள் ரூ. 20,000 இல் உள்ள பத்திரங்களின் பங்கு 2017-2018 இல் பூஜ்ஜியத்தில் இருந்து 2018-19 இல் 68.72% ஆகவும், 2019-20 இல் 92.55% ஆகவும், 2020-21 இல் 99.49% ஆகவும், 2020-21 இல் 99.921% ஆகவும், 29.921% – 99.921% ஆகவும் அதிகரித்துள்ளது

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றுப் பேசுகையில், “தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புக்கு முரணானது என்று மாண்புமிகு உச்ச நீதிமன்றம் சரியாகக் கூறியுள்ளது. இது ஒரு வெளிப்படையான தேர்தல் செயல்முறை மற்றும் அமைப்பின் நேர்மையை உறுதி செய்யும் என கூறியிருந்தார். ஆனால், தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திமுக முதல் இரண்டு ஆண்டுகளில் பத்திரங்கள் மூலம் எந்த நிதியும் பெறவில்லை, ஆனால் அதன் பிறகு அதன் மொத்த பங்களிப்புகளில் (ரூ 20,000 க்கு மேல்) பத்திரங்களின் பங்கு கிட்டத்தட்ட 100% ஆக அதிகரித்துள்ளது. 2019-2020ல் 94.18% ஆக இருந்த நிலையில் தேர்தல் பத்திரம் மூலும்,   45 கோடி ரூபாய் கிடைத்தபோது, 2020-21ல் திமுகவின் நன்கொடைகளில் பத்திரங்களின் பங்கு 70.17% ஆகக் குறைந்து, 2021-22ல் 99.3% ஆகவும், 2022-2ல் 99.26% ஆகவும் அதிகரித்தது.  கடந்த இரண்டு நிதியாண்டுகளில் ரூ.306 கோடி மற்றும் ரூ.185 கோடியை பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

எலெக்டோரல் பாண்ட் வாங்கிய முக்கிய நிறுவனங்கள்:

மொத்தம் 213 நன்கொடையாளர்கள் 10 கோடி ரூபாய்க்கு மேல் தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளனர்.  முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களில் ஈடுபட்டுள்ள மேகா இன்ஜினியரிங் நிறுவனம் ரூ.966 கோடி மதிப்பிலான பத்திரங்களை வாங்கியது. இந்த பத்திரங்கள்  அரசியல் நன்கொடைகள் முதன்மையாக அரசியல் கட்சிகள் அல்லது அவற்றின் தலைவர்களின் பெயர்களில் வழங்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

ஸ்டீல் அதிபர் லட்சுமி மிட்டல் ரூ.35 கோடி மதிப்புள்ள பத்திரங்களை வாங்கி அரசியல் கட்சிகளுக்கு நிதியாக கொடுத்துள்ளார்.

வேதாந்தா லிமிடெட் ரூ.398 கோடி மதிப்பிலான பத்திரங்களை வாங்கியது.

பார்தி ஏர்டெல்லின் மூன்று நிறுவனங்கள் ரூ.246 கோடி மதிப்புள்ள பத்திரங்களை வாங்கி உள்ளன. இந்த மூன்று நிறுவனங்கள்  கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளன.

ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் ரூ.1,350 கோடி மதிப்புள்ள பத்திரங்களுடன் குறிப்பிடத்தக்க வாங்குபவராக உருவெடுத்துள்ளது.

தேர்தல் பத்திரம் வாங்கிய கார்ப்பரேட் நிறுவனங்கள் விவரம்:

ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ, கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், மேகா இன்ஜினியரிங், பிரமல் எண்டர்பிரைசஸ், டோரண்ட் பவர், பார்தி ஏர்டெல், டிஎல்எஃப் கமர்ஷியல் டெவலப்பர்கள், வேதாந்தா லிமிடெட், அப்பல்லோ டயர்ஸ், எடெல்வீஸ், பிவிஆர், எஸ்புலா, கெஸ்வென்டர், வின்சென்டர், கெஸ்வென்டர், வின்சென்டர், வின்சென்டர், வின்சென்டர் , வர்த்மான் டெக்ஸ்டைல்ஸ், ஜிண்டால் குரூப், பிலிப்ஸ் கார்பன் பிளாக் லிமிடெட், சியட் டயர்கள், டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ், ஐடிசி, கேபீ எண்டர்பிரைசஸ், சிப்லா மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட், பல்வேறு துறைகளில் இருந்து பரவலான பங்களிப்பை பிரதிபலிக்கிறது.

காஜியாபாத்தில் உள்ள யசோதா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தலா ரூ.1 கோடி மதிப்பிலான  162 பத்திரங்களை வாங்கியுள்ளது,

பஜாஜ் ஆட்டோ: ரூ.18 கோடி மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியுள்ளது.

பஜாஜ் ஃபைனான்ஸ்: ரூ. 20 கோடி மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியுள்ளது.

இண்டிகோ நிறுவனங்கள்: மூன்று நிறுவனங்கள் ரூ.36 கோடி மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியுள்ளன.

ஸ்பைஸ்ஜெட்: ரூ.65 லட்சம் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியுள்ளது.

இண்டிகோவைச் சேர்ந்த ராகுல் பாட்டியா: ரூ.20 கோடி மதிப்புள்ள பத்திரங்களை வாங்கினார்.

Qwik சப்ளை செயின் பிரைவேட் லிமிடெட் (மும்பையை தளமாகக் கொண்டது) ரூ. 410 கோடி மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியுள்ளது.

ஹால்டியா எனர்ஜி: ரூ.377 கோடி மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியுள்ளது. எ

திர்கால கேமிங் மற்றும் ஹோட்டல் சேவைகள் – ரூ 1,368 கோடி

மேகா இன்ஜினியரிங் மற்றும் உள்கட்டமைப்பு லிமிடெட் – ரூ 966 கோடி

வேதாந்தா லிமிடெட் – ரூ 400 கோடி

பாரதி குழுமம் – ரூ 247 கோடி

எஸ்சல் மைனிங் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் – ரூ 224 கோடி

வெஸ்டர்ன் யுபி பவர் டிரான்ஸ்மிஷன் – ரூ 220  கோடி,

கெவென்டர் இன்ஃப்ரா 220 கோடி

லிமிடெட் – ரூ 194 கோடி

மதன்லால் லிமிடெட் – ரூ 185 கோடி

டிஎல்எஃப் குழுமம் – ரூ 170 கோடி

உட்கல் அலுமினா இன்டர்நேஷனல் – ரூ 145.3 கோடி

ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் – ரூ 123 கோடி

பிர்லா கார்பன் இந்தியா – ரூ 105 கோடி

ருங்டா சன்ஸ் – ரூ 100 கோடி

டாக்டர் ரெட்டி’ 80 கோடி

பிரமல் எண்டர்பிரைசஸ் குழுமம் – ரூ 60 கோடி

நவ்யுகா இன்ஜினியரிங் – ரூ 55 கோடி

ஷிர்டி சாய் எலக்ட்ரிக்கல்ஸ் – ரூ 40 கோடி

சிப்லா லிமிடெட் – ரூ 39.2 கோடி

லட்சுமி நிவாஸ் மிட்டல் – ரூ 35 கோடி

கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் – ரூ 33 கோடி

ஜிண்டால் பஜாஜ் ஆட்டோ – ரூ 30 கோடி

சன் பார்மா லேபரட்டரீஸ் – ரூ.25 கோடி

மேன்கைண்ட் பார்மா-ரூ.24 கோடி

பஜாஜ் ஃபைனான்ஸ்-ரூ.20 கோடி

மாருதி சுஸுகி இந்தியா-ரூ.20 கோடி

அல்ட்ராடெக்-ரூ.15 கோடி

டிவிஎஸ் மோட்டார்ஸ்-ரூ.10 கோடி

எடெல்வீஸ் குரூப்-ரூ.4 கோடி

என்று எஸ்பிஐ வெளியிட்டது.

ஏப்ரல் 1, 2019 முதல் பிப்ரவரி 15, 2024 வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டன, பெரும்பாலானவை அரசியல் கட்சிகளால் மீட்டெடுக்கப்பட்டன.