ஐந்து வருடங்களுக்கு முன் சுந்தர்.சி. இயக்கத்தில் விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், அஞ்சலி, ஓவியா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘கலகலப்பு’.
நடிகை குஷ்பு சுந்தரின் ‘அவ்னி சினி மேக்ஸ்’ நிறுவனம் தற்போது ‘கலகலப்பு -2’ படத்தை தயாரித்து வருகிறது. இதில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, கேத்ரின் தெரசா, நிக்கி கல்ராணி ஆகியோர் முக்கிய கதாபாரத்திரத்தில் நடிக்கிறார்கள். மேலும், ராதாரவி, மனோபாலா, சிங்கம் புலி, வையாபுரி, சந்தான பாரதி, அனு மோகன் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.
கடந்த அக்டோபர் 4–ம் தேதி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கி தொடர்ந்து 15 நாட்களுக்கு நடைபெற்றது.
தற்போது அடுத்தக் கட்ட படப்பிடிப்பு காசியில் துவங்கி இருக்கிறது. தொடர்ந்து இந்தூர், புனே மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.