சென்னை :

ரூபாய் நோட்டில் உள்ள காந்திப்படத்தை நீக்கக் கோரி சென்னை தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம் விதித்துள்ளது.

ரூபாய் நோட்டுகளில் காந்திப்படம் இடம்பெறுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி ராமநாதபுரத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். கள்ளநோட்டு, ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படம் இடம்பெறுவதால் அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது என்று  அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அரசியல் சட்டப்படி தீவிர ஆலோசனைக்குப் பிறகே காந்தியின் படம் ரூபாய் நோட்டில் இடம்பெறுகிறது என்று தெரிவித்தனர்.

மேலும் தேவையற்ற வழக்கின் மூலம் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாகக்கூறி முருகானந்தத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.