நெல்லை,

மிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில், பெரும்பான்மையை நிரூபித்து மீதமுள்ள 3 ஆண்டுகளும் ஆட்சி தொடரும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழல் காரணமாக நித்திய கண்டம் பூரண ஆயுசு என்ற நிலையில் தமிழக அரசு தள்ளாடி வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு மீதமுள்ள 3 ஆண்டுகளையும் நிறைவு செய்யும் சென்று அமைச்சர் கூறி உள்ளார்.

நெல்லை சென்றுள்ள அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், ராமையன்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது,

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மக்களுக்கு என்னென்ன திட்டங்கள் செயல்படுத்த விரும்பினாரோ, அதை தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார். தற்போதைய அரசியல் சூழ்நிலையில், எடப்பாடி தலைமையிலான அரசு, நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்து ஏனைய 3 ஆண்டுகளுக்கும் ஆட்சி தொடரும் என்று கூறினார்.