டில்லி,

.தி.மு.க பொதுச் செயலாளர் யார் என்று தகவல் உரிமை பெறும் சட்டம் மூலம் இந்திய தேர்தல் ஆணையத்திடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்துள்ள தேர்தல் ஆணையம், அதிமுக பொதுச்செயலாளர் யார் என்பது பற்றி இதுவரை முடிவெடுக்க வில்லை என்ற தகவலை தெரிவித்து உள்ளது.

சுமார் 6 மாதத்தற்கும் மேலாக நிலுவையில் உள்ள ஒரு பிரச்சினையில் தேர்தல் கமிஷனின் அக்கறையற்ற பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அ.தி.மு.க பொதுச்செயலாளராக தேர்வுசெய்யப்பட்டார் சசிகலா. பின்னர்,  சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தற்போது சிறைத் தண்டனையில் உள்ளார்.

அதன் பின்னர் அந்த கட்சி உடைந்து தற்போது,ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி, டிடிவி தினகரன் அணி என  மூன்று அணியாக உள்ளது.

இந்நிலையில், சென்னை தியாகராய நகரை சேர்ந்த சுவாமிநாதன் கல்யாணசுந்தரம் என்பவர் தகவல் பெறும் உரிமை சட்டம் (ஆர்டிஐ)  மூலம் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி கேட்டிருந்தார்.

அதில், தேர்தல் ஆணையத்தை பொறுத்த வரை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் யார்?  துணை பொதுச்செயலாளர் யார் என்று கேள்விகள் கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், ”அ.தி.மு.க கட்சியில் உட்கட்சி விவகாரங்கள் நடைபெற்று வருகிறது. கட்சியின் பொதுச் செயலாளர் பிரச்சினை இன்னும் நிலுவையில் தான் உள்ளது” என்று தெரிவித்து உள்ளது.