சென்னை,

றைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று பிற்பகல்3.30 மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  துணைமுதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் எந்தவித பிரச்சினையும் இன்றி முடிவடைந்ததால் அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர்கள் மரியாதை செலுத்தியதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதா மறைந்த நிலையில், இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் கடந்த 8ந்தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் முக்கியமான  சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் டவுளாக உயர்த்தும் மசோதா, உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவி நீட்டிப்பு போன்ற முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த சட்டசபை கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்த நிலையில் மரியாதை நிமித்தமாக ஜெ. சமாதிக்கு வந்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர். சமாதிக்கும் மரியாதை செலுத்தினர்.