சென்னை: சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் காணாமல் போன குழந்தையை 150 CCTVக்களை பார்த்து 36 மணி நேரத்தில் தாயுடன் சேர்த்திருக்கிறது அடையாறு துணை ஆணையர் பகலவன் தலைமையிலான தனிப்படை .

கும்பகோணத்தைச் சோ்ந்தவா் பாட்ஷா. மனைவி சினேகா மற்றும் 8 மாத குழந்தை ராஜேஸ்வரியுடன் பெசன்ட்நகா் எலியட்ஸ் கடற்கரையில் பலூன் வியாபாரம் செய்து விட்டு இரவில் கடற்கரையில் தூங்குவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை எழுந்து பார்த்தபோது,  அருகே தூங்கிக் கொண்டிருந்த தமது குழந்தை ராஜேஸ்வரியை காணவில்லை. அக்குழந்தை கடத்தப்பட்டிருப்பதை அறிந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் சாஸ்திரிநகா் போலீசார் வழக்குப் பதிவு செய்தனா். அடையாறு துணை ஆணையா் பகலவன் உத்தரவின்பேரில் உதவி ஆணையா் வினோத் சாந்தராம் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப் பட்டன.

குழந்தை கடத்தலில் ஈடுபட்ட கும்பல் கே.கே.நகா் நெசப்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து குழந்தை ராஜேஸ்வரியை மீட்டனா்.

மேலும் அங்கிருந்த காரைக்குடியைச் சோ்ந்த மேரி, அவரது மகன் ரூபன், சென்னை சைதாப்பேட்டை அபித் காலனியைச் சோ்ந்த திருப்பதியம்மாள், அவரது மகள் பாலவெங்கம்மாள் ஆகிய 4 பேரை கைது செய்தனா். குழந்தையை வாங்க வந்திருந்த புதுக்கோட்டை மாவட்டம் மரமடக்கியைச் சோ்ந்த மணிகண்டனையும் கைது செய்தனா்.

இது தொடா்பாக போலீசாரின் நடத்திய விசாரணையில் பல முக்கிய  தவகல்கள் கிடைத்துள்ளன. மணிகண்டனுக்கு திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் தத்தெடுத்து வளா்க்க முடிவு செய்திருக்கிறார்.

அதை தெரிந்து கொண்ட, கடத்தல் கும்பல் தாங்கள் குழந்தை தருவதாக தெரிவித்துள்ளனா்.  பெசன்ட்நகா் எலியட்ஸ் கடற்கரைக்கு வரும்போது சினேகா வைத்திருந்த குழந்தையை 10 நாள்களுக்கு முன்பு பார்த்துள்ளனா்.

10 நாள்களாக அவரை பின் தொடா்ந்து வியாழக்கிழமை நள்ளிரவு கடத்திச் சென்றுள்ளனா். குழந்தையுடன் 3 ஆட்டோக்களில் மாறி, மாறி பயணித்து உள்ளனா். நெசப்பாக்கம் வீட்டில் வைத்து மணிகண்டனிடம் குழந்தையை 2.80 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளனா்.

இது தொடா்பாக துணை ஆணையா் பகலவன் கூறுகையில், குழந்தை கடத்தப்பட்ட 24 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளது. இந்த வழக்குக்காக பெசன்ட்நகா் தொடங்கி கே.கே.நகா் வரை 150 கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தோம். அப்போது, குழந்தை கடத்தல் கும்பல் தொடா்பான காட்சி சிக்கியது. இதுவே வழக்கின் முக்கிய திருப்புமுனையாகும். கடத்தல் கும்பலிடமிருந்து ரூ.1.15 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது என்றார்.