டோக்கியோ: ஜப்பான் நாட்டில் நடைபெற்று வரும் உலக பாரா ஒலிம்பிக்கில்  தமிழ்நாட்டைச்சேர்ந்த தங்கமகன்  மாரியப்பன் தங்கவேலு தங்கம் சென்று அசத்தினார். இவர் ஏற்கனவே 2016ம் ஆண்டு பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நிலையில், தற்போதைய (2024) பாரா ஒலிம்பிக்கிலும் தங்கம் வென்று அசத்தி உள்ளார்.

ஜப்பான் நாட்டின் கோபே நகரில்  நடப்பாண்டுக்கான மாற்று திறனாளிகளுக்கான பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டிகள்  நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகள் மே 17 ஆம் தேதி தொடங்கி மே 25 ஆம் தேதி வரை நடைபெற்று வருகின்றன. . இதில் இந்தியா சார்பில் ஏராளமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

முதலில் நடைபெற்ற  பாரா தடகள 400 மீட்டர் டி20 பிரிவில் . இந்திய தடகள வீராங்கனை தீப்தி ஜீவன்ஜி பெண்களுக்கான  இந்தியாவுக்கான முதல் தங்க பதக்கத்தை வென்றார். இவரைத் தொடர்ந்து ஓட்டப்பந்தய வீராங்கனை பிரீத்தி பால், உயரம் தாண்டுதல் வீரர் நிஷாத் குமார் முறையே வெண்கலம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

இவர்கள் வரிசையில், ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு 1.88 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகள் அடிப்படையில் இந்தியா நான்கு தங்கம், நான்கு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலம் என மொத்தம் பத்து பதக்கங்களுடன் புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டின் சேலத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு  கடந்த 2016 ஆம் ஆண்டு ரியோ பாரரா ஒலிம்பிக்கில்  தங்க பதக்கத்தை வென்றார். இதன் பிறகு 2021 பாரா ஒலிம்பிக் போட்டியில் டி63 பிரிவில் மாரியப்பன் தங்கவேலு வெள்ளி பதக்கத்தை தட்டிச் சென்றார். கடந்த ஆண்டு பாரா ஒலிம்பிக் போட்டிகளில் டி63 பிரிவில் மாரியப்பன் தங்கவேலு வெள்ளி பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்த நிலையில்,தற்போது மீண்டும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.