துரை

மிழக மாணவர் சரத்பிரபு மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறி உள்ளார்.

தில்லியில் மருத்துவக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு பயிலும் திருப்பூரை சேர்ந்த மாணவர் சரத் பிரபு மர்மமாக நேற்று மரணம் அடைந்துள்ளார்.   இது தமிழகத்தில் மட்டும் இன்றி நாடெங்கும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.   இந்நிகழ்வுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது மதுரைக்கு வந்துள்ள தமிழக பாஜக தலைவ்ர் தமிழிசை சௌந்தரராஜன், “தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் சரத் பிரபு டில்லியில் மர்மமாக மரணம் அடைந்துள்ளார்.   அவர் மரணம் மிகவும் வருத்தம் அளிக்கிறது.    இந்த மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.   மாணவர்கள் வெளி மாநிலங்களில் பயிலும் போது அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்”  என கூறி உள்ளார்