நடிகர் விஜய் ரசிகர்களின் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த நிர்வாகிகள் கூட்டம் சென்னை பனையூரில் நேற்று நடைபெற்றது.

இயக்கத்தின் புதிய அலுவலக கட்டிடம், யூடியூப் சேனல், ட்விட்டர், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் துவங்கி வைக்கப்பட்டது.

தவிர, “தளபதி விஜய் குருதியகம்” என்ற செயலியையும் அறிமுகப்படுத்தினர்.

இது குறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தளபதி விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க, தளபதியின் உயிருக்கு உயிரான ரசிகர்கள் மக்கள் சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

அப்படிப்பட்ட லட்சக்கணக்கான இளைஞர்கள் சக்தியை, மக்களுக்கு பயனுள்ள வகையில் வழிநடத்தும் விதமாக மற்றும் ஒரு முயற்சியாக இரத்ததானம் செய்ய “தளபதி விஜய் குருதியகம்” என்ற செயலியை (Mobile Application) உருவாக்கி இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.