சென்னை

ரும் 2024 மக்களவை தேர்தலை நடத்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஜூலை 4 ஆம் தேதி முதல் சரிபார்க்கப்பட உள்ளது.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர், ”நடைபெற உள்ள தேர்தலுக்கு முன்பாக, அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களும் சரியாக இருக்க வேண்டும்.  அவற்றில் ஏதாவது கோளாறுகள் இருப்பின், அதை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

வரும் ஜூலை 4ம் தேதியில் இருந்து  தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த பணிகள் தொடங்கப்பட உள்ளது. தற்போது தமிழகத்தில், 2024 நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு போதுமான அளவுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகள் உள்ளன.

வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1, இந்த தேதிகளுக்குள் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், விண்ணப்பித்து வாக்காளர் அடையாள அட்டையைப்  பெறலாம்” என்று தெரிவித்துள்ளார்.