சென்னையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் பாதிப்பு உறுதியானவர்கள் எண்ணிக்கை குறைந்துவருவதாக தரவு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்று, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களில் 17.8 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 18 ம் தேதி 17.7 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது, மே 10 ம் தேதி 26 சதவீத அளவுக்கு அதிகரித்த நிலையில் அதன் பிறகு படிப்படியாக குறைந்து தற்போது 17.8 சதவீத அளவுக்கு வந்திருப்பது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

சென்னை நீங்கலாக, தமிழகத்தின் பிற பகுதிகளில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களில் பாதிக்கப்பட்டவர்களின் சதவீதம் அதிகரித்து வருகிறது, இங்கு நேற்று 22.4 சதவீதம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.