இலங்கையில் வாழும் அனைவருக்கும் இந்த ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாத இறுதிக்குள் தடுப்பூசி போட்டு முடிக்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இதற்காக 3.2 கோடி டோஸ் தடுப்பூசிகள் வாங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் இவர்களுக்கு 2.9 கோடி டோஸ் தடுப்பூசி தேவைப்படுகிறது.

இந்நிலையில், இலங்கை அரசு 30 லட்சம் டோஸ்கள் அதிகப்படியாக வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.