ராமேஸ்வரம்
நேற்று ராமேஸ்வரம் கடல் பகுதியில் மர்ம டிரோன் பறந்துள்ளது.
இலங்கை கடல் பகுதிக்கு மிக அருகில் ராமேஸ்வர, உள்ளதால் இது முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக காணப்படுகிறது. ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு அவ்வப்போது கடல் அட்டை, பீடி இலை, மஞ்சள், ஏலக்காய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கடத்தி செல்லப்படுகின்றன. அத்துடன் இலங்கையில் இருந்தும் கடத்தல்காரர்கள் மூலம் தங்கக்கட்டிகள் தமிழகத்திற்கு கடத்தி கொண்டு வரப்படுகின்றன.
நேற்று ராமேஸ்வரம் அருகே உள்ள இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று மர்ம டிரோன் பறந்து சென்றதாக கடற்படையின் ரேடாரில் பதிவாகி உள்ளது. இதையொட்டி இந்திய கடற்படை மற்றும் ராமேசுவரத்தில் உள்ள மத்திய, மாநில உளவு பிரிவு போலீசார் ராமேஸ்வரம் அருகே இந்திய கடல் எல்லை பகுதியில் பறந்து சென்ற டிரோன் எந்த பகுதியில் இருந்து வந்தது? யார் மூலம் பறக்க விடப்பட்டது? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமேஸ்வரம் கடல் பகுதியில் நேற்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் சுற்றுலாத்துறை குறித்த தகவலுக்காக டிரோன் கேமரா பறக்க விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆகவே, சுற்றுலா வளர்ச்சித்துறை அதிகாரிகளிடமும் உளவு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த பகுதியில் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.