மொபா

வெடிகுண்டு புரளியால்  கோவா விமான நிலையத்தில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவா மாநிலம் மொபா நகரில் உள்ள மனோகர் சர்வதேச விமான நிலையத்திற்கு பயணி ஒருவர் வந்துள்ளார்.அவர் குஜராத்தின் ஆமதாபாத் நகரைச் சேர்ந்தவர் ஆவார் இவர் கோவாவில் இருந்து குஜராத் செல்வதற்காக வந்துள்ளார்.

பாதுகாப்பு சோதனையின் போது அவரிடம் விமான நிலையத்தின் ஊழியர் ஒருவர், தடை செய்யப்பட்ட பொருட்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் வைத்திருக்கிறீர்களா? என கேட் டுள்ளார். உடனே அவர், ஆம். பையில் வெடிகுண்டு ஒன்றை வைத்திருக்கிறேன் என்று பதில் அளித்துள்ளார்.

ஊழியர் அதிர்ச்சி அடைந்து உயரதிகாளிடம் தெரிவித்து உள்ளார். இதையொட்டி விமான நிறுவனத்தின் பாதுகாப்பு மேலாளர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்

மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் வெடிகுண்டு கண்டறியும் குழு அந்த பகுதியை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சோதனையில் ஈடுபட்டது. அவரிடமும், பயணிகளின் உடைமைகள் மற்றும் பைகளிலும் முழு அளவில் சோதனை செய்யப்பட்டது.

இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதும் அது வெறும் புரளி என்றும் தெரிய வந்தது. விமல் பிரஜாபதி (வயது 38) என அவர் அடையாளம் காணப்பட்டு உள்ளார். காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.