நெல்லை

காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயகுமார் கொலை குறித்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பாதி எரிந்த நிலையில்  பிணமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக ஒரு கடிதம் மட்டும் கிடைத்துள்ளது. அது கடந்த 30-ந் தேதி காங்கிரஸ் கட்சியின் ‘லெட்டர் பேடில்’ ‘மரண வாக்குமூலம்’ என்று நெல்லை மாவட்ட காவல் சூப்பிரண்டுக்கு எழுதப்பட்டு இருந்தது.

கடிதத்தில், தனக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் தரப்பில் இருந்து கொலை மிரட்டல் வந்து கொண்டு இருக்கிறது. எனது உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் இந்த கடிதத்தில் நான் குறிப்பிட்ட நபர்கள் தான் காரணம் என்று எழுதப்பட்டு இருந்தது.

ஆனால் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 7 தனிப்படை பிரிவு அமைக்கப்பட்டுள்ள்ளது. காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

காவல்துறையினர்,

“மரண வாக்குமூலம் என்ற பெயரில் உள்ள புகார் மனு எஸ்.பி.யிடம் அளிக்கப்படவில்லை. மே 2-ம் தேதி அன்றுதான் ஜெயக்குமாரின் மகன் கருத்தையா ஜெப்ரின் தனது தந்தையை காணவில்லை என உவரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அளிக்க வந்தபோது ஜெப்ரின் கடிதத்தில் 30.04.2024 என போடப்பட்டிருந்தது. அந்த கடிதத்தை அதற்கு முன் யாரிடமும் ஜெயக்குமார் அளிக்கவில்லை”

என தெரிவித்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.