பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’.

முழுக்க காதலை மையப்படுத்திய கதையைத்தான் இது என கூறப்படுகிறது.

பா.இரஞ்சித் இயக்கிய முதல் படமான ‘அட்டகத்தி’ முழுக்க காதலை மையப்படுத்தி, புனித பிம்பத்தைத் தகர்த்து நையாண்டி பாணியில் எடுக்கப்பட்டது. அடுத்ததாக தீவிரமான கதைக் களங்களையே இயக்கி வந்தார். தற்போது மீண்டும் காதலை மையப்படுத்திய படத்தை பா.இரஞ்சித் இயக்கவிருப்பது நினைவுகூரத்தக்கது.

இதுவரை பா.இரஞ்சித் இயக்கிய 5 படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்து இருந்தார். அதனால் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்துக்கும் அவரே இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பா.இரஞ்சித் – சந்தோஷ் நாராயணன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இப்படத்திற்கு தற்போது தென்மா என்பவர் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இசையமைப்பாளர் தென்மா பா.இரஞ்சித் தயாரித்த ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.