ஐதராபாத்

இன்று காலை 7 மணிக்கு தெலுங்கானா மாநில சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது.

இன்று 119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானா சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.இங்கு முதல்-மந்திரி சந்திரசேகா் ராவ் தலைமையிலான ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆா்.எஸ்.), பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடையே கடுமையான போட்டி காணப்படுகிறது.

மேலும் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம்., சி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகளும் போட்டியைச் சந்திக்கின்றன.

இன்றைய தேர்தலில் நக்சலைட்டுகள் பாதிப்பு காணப்படும் 13 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையும், இதர தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையும் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

தேர்தலில் முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ், அவரது மகனும் அமைச்சருமான கே.டி.ராம ராவ், தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி உள்பட மொத்தம் 2,290 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இன்று பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை டிசம்பா் 3 ஆம் தேதி நடைபெறுகிறது.