நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில்  12 ஆம் வகுப்பு படிக்கும் 17 வயதுடைய டீனேஜ்  மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.  இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது உள்ளது.

மக்களுக்கு காவலனாக நிற்க வேண்டிய  காவல்துறையே, இளம்பெண்ணிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்டுள்ளது, காவல்துறை மீதான மக்களின் நம்பிக்கையை தகர்த்துள்ளது. பெண்கள் மீதான குற்றங்களை தடுக்கக்கூடிய காவல்துறையில் பணியாற்றுபவரே  டீனேஜ் பெண்ணுக்கு  பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் அவரை காவல்துறை தலைவர் இடைநீக்கம் செய்துள்ளார்.

பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பாக கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து நடந்து வருகிறது.  மேலும் போஸ்கோ சட்டத்தில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ல் குற்றங்களை தடுக்கக்கூடிய காவல்துறையில் பணியாற்றுபவரே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், அவர்மீது போஸ்கோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்காமல், இடைநீக்கம்  மட்டும் செய்யப்பட்டுள்ள சம்பவம் நெல்லையில் நடைபெற்றுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால். 45 வயதான இவர் திருநெல்வேலி மாவட்டம் சிவந்திபட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவர் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் நெல்லை புறநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

இதுதொடர்பாக தலைமை காவலர் ராஜகோபாலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், கடந்த மார்ச் 5 ஆம் தேதி ஆயுதப்படைக்கு மாற்றி அதிரடி நடவடிக்கை எடுத்தார். இதற்கிடையில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய அனைத்து மகளிர் போலீசார், சிறுமிக்கு தலைமை காவலர் ராஜகோபால் பாலியல் தொல்லை கொடுத்ததை உறுதி செய்தனர். அவர் மீதான வழக்கு போக்சோ சட்டத்தின் கீழ் மாற்றப்பட்டது.

இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் விசாரணை நடத்தி ராஜகோபாலை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.