சென்னை:
டுப்பூசி போட்டுவதில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தடுப்பூசிகள் குறைவாக வழங்கப்படுவதால் 18 முதல் 45 வயது உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட வேலை செய்யும் நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசி போடப்படும்.

குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள், டாக்ஸி, பஸ் டிரைவர்கள்/நடத்துனர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு இந்த முன்னுரிமை அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.