சென்னை: வள்ளலார் தினத்தை முன்னிட்டு,  சென்னையில், வரும் 5-ந்தேதி ‘டாஸ்மாக்’ கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பி,  வடலூர் ராமலிங்கர் நினைவுதினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் கீழ், சென்னையில் உள்ள அனைத்து ‘டாஸ்மாக்’ கடைகளும், அனைத்துவிதமான ‘பார்’களும் வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கண்டிப்பாக மூடப்பட வேண்டும். அன்றையதினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபான விற்பனை விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அதுபோல சென்னை மாநகராட்சி சார்பில், சென்னையில் 5ந்தேதி அன்ற இறைச்சி கடைகள் திறக்க தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வள்ளலார் தினத்தை முன்னிட்டு,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் இயங்கி வரும் அனைத்து கள், சாராயம் மற்றும் பார் உட்பட அனைத்து வகை மதுக்கடைகளும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார் மூடப்பட்டிருக்க வேண்டுமென்றும், அன்றைய தினத்தில் எல்லா கடைகளிலும் மது விற்பனை தடை செய்யப்படுகிறது என கலால்துறை துணை ஆணையர் சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அன்றைய தினம் தடையை மீறி மது விற்பனை செய்பவர்கள் மீது புதுச்சேரி கலால் சட்ட விதிகள் 1970-68T கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.