சென்னை:

மிழர்கள் இந்துக்கள் அல்ல.. கர்நாடகா லிங்காயத்துகளைப் போல சைவர்களாக – தனி மதமாக – அறிவிக்க போராட்டம் நடத்துவோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் கடவுள்-2 படத் தொடக்க விழாவில் கலந்துகொண்ட சீமான் பேசியதாவது:

“இந்து என்ற சொல் எப்படி வருகிறது? மதம் பரப்ப வந்த கால்டுவெல் போப் மக்கள் கூட்டத்தைக் கணக்கிட்டார்.  ஆரியர் என ஒரு பகுதியினரைக் குறிப்பிட்டார். மற்றொரு பகுதியினரை –  தென் மாநில மக்களை – ஆரியர்களுக்கு  எதிராக திராவிடர் என்ற சொல்லை பயன்படுத்தினார்.

இந்தியா என்பது ஒரே நாடாக இருந்தது கிடையாது. சமஸ்தானங்களாகவும் பாளையங்களாகவும் இந்த நிலப்பரப்பு பிரிந்துதான் கிடந்தது.   ஆங்கிலேயர்கள்தான் இதை ஒரே நாடாக மாற்றினர்.  அப்போது சிந்து சமவெளி நாகரிகத்தை குறிப்பிடும் போது சி உச்சரிப்பு வராமல் இ என்பதைப் பயன்படுத்தி இந்தியா என குறிப்பிட்டனர்.

இந்த மக்கள் கூட்டத்தை கணக்கிடும் போது எவன் பார்சி இல்லையோ
; எவன் கிறிஸ்தவன் இல்லையோ… எவன் இஸ்லாமியன் இல்லையோ அவர்கள் அத்தனை பேரையும் வெள்ளைக்கார ராணி இந்து என சட்டம் இயற்றினார்.  அதனால் சைவர்கள் நாங்கள் இந்துக்களாகிவிட்டோம்.

சமணர்கள் இந்துவாகிவிட்டனர். வைணவர்கள் இந்துவாகிவிட்டனர். பவுத்தர்கள் இந்துவாகிவிட்டனர். சீக்கியர் தனி மதம்.. அவர்களையும் இந்துக்களாக்கிவிட்டனர். தமிழ்நாட்டில் இருப்பது எல்லாம் சைவ மடங்கள். ஆனால் சட்டப்படி
அவை இந்து மடங்கள்.

மறைந்த காஞ்சி பெரியவர் தெய்வத்தின் குரலில் ஆங்கிலேயர் நமக்கு இந்து என பொதுப்பெயர் வைத்ததால் தப்பித்தோம் என எழுதியிருக்கிறார்.

நாங்கள் 50,000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து  தமிழர்கள். எங்களுக்கு என்று தனிவழிபாடு, தனிமரபு இருக்கிறது.

கர்நாடகாவில் லிங்காயத்துகள் கிளம்பிவிட்டார்கள். தங்களை இந்து மதத்தில் சேர்க்க்ககூடாது என்கின்றனர்.

அதேபோல் நாங்களும் எங்களை இந்துக்களில் சேர்க்காதீர்கள்; சைவமாக இருக்கும் போது நாங்கள் தலைவராக இருக்க முடியும். ஆனால் இந்துவாக இருந்தால் நாங்கள் தலைவர்களாக முடியாது.

தமிழர்களை சைவர்களாக அறிவிக்கக்கோரி போராடுவோம்” என்று சீமான் பேசினார்.