சென்னை:
மொழிவாரி சிறுபான்மையினர் நலனுக்காக தனி நிறுவனத்தை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், மொழிவாரி சிறுபான்மையினர் சமூக-பொருளாதாரத்தை மேம்படுத்த ஒரு தனி நிறுவனத்தை அமைக்க வேண்டும் என சிறுபான்மையினர் நல இயக்குனர் பரிந்துரை செய்ததாகக் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாடு மொழிவாரி சிறுபான்மையினர் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் என்ற நிறுவனத்தை உருவாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிறுவனம் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் என்றும், நிறுவனத்தின் தலைவரை அரசு நியமிக்கும், நிர்வாக இயக்குனராக சிறுபான்மையினர் நல இயக்குனர் இருப்பார் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.