சென்னை: மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் நாளை மாலை 3 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல், வாக்காளர்கள் விவரம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

இரட்டை வாக்காளர்களின் பதிவுகள், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடைபெறும்.