சென்னை: பராமரிப்புப் பணி காரணமாக சென்னையில் நாளை பல பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை விநியோகம் இருக்காதுரு என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

பராமரிப்புப் பணி காரணமாக நாளை (08-10-2021)  காலை 09.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

கிண்டி பகுதி: எம்.கே.என் ரோடு, ஆலந்தூர் மெயின் ரோடு, ரயில் நிலையம் ரோடு, ஜி.எஸ்.டி ரோடு, மதுரை தெரு, எரிக்கரை மற்றும் ஆதம்பாக்கம் பகுதி, வேளச்சேரி ரோடு, ஆபிசர் காலனி, என்.ஜி.ஒ காலனி, எஸ்.பி.ஐ காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்,

அண்ணாசாலை பகுதி: அண்ணாசாலை தமிழ் இந்து அலுவலகம் சுரங்கபாதை அருகில் இருந்து ஸ்பென்சர் சிக்னல் வரை, ஜி.பி ரோடு, உட்ஸ் ரோடு, கிளப் அவுஸ் ரோடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

அம்பத்தூர் பகுதி: 608 த.நா.வீ.வ, அயப்பாக்கம் பிரதான சாலை, 336 த.நா.வீ.வ, டி.ஜி அண்ணா நகர், குப்பம் (அத்திப்பட்டு), அம்பத்தூர் வானகரம் சாலை. ஐஸ்வர்யா நகர், கேலக்ஸி ரோடு, கீழயாணம்பாக்கம், நொலம்பூர் த.நா.வீ.வ, எஸ்.ஆர்.,ஆர் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

செங்குன்றம் பகுதி: பாடியநல்லூர், பி.டி மூர்த்தி நகர், ஆட்டன்தாங்கல், சோலையம்மன் நகர்,

பெரம்பூர் பகுதி: மூர்த்தி ராஜா தெரு, ரங்கமானார் தெரு, தான்தோன்றியம்மன் கோயில் தெரு, பெசட் தெரு, துலுக்கானத்தம்மன் கோயில் தெரு, ராஜபுத்திரர் தெரு மற்றும் மேற்காணும் இடங்க்ளில் சுற்றியுள்ள பகுதிகள்.

மணலி பகுதி: காமராஜ் சாலை, பாடசாலை, சின்னசேக்காடு, ராஜசேகர் நகர், திருவள்ளுவர் தெரு, தேவராஜ் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

சோழிங்கநல்லூர் பகுதி: எழில் நகர் முழுவதும், கண்ணகி நகர் ஒரு பகுதி, வி.பி.ஜி அவென்யூ, பிள்ளையார் கோயில் தெரு, என்.ஜி.கே அவென்யூ, செயலகக்காலனி, மகாத்மா காந்தி நகர், கற்பக விநாயகர் நகர், திருவள்ளுவர் நகர், ராமலிங்க நகர், ஈஞ்சம்பாக்க்ம மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

ஈஞ்சம்பாக்கம் பகுதி; த.நா.வீ.வ பிளாட்ஸ் சோழிங்கநல்லூர், பள்ளி ரோடு.

மாலை 4.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.