சென்னை

தமிழகத்தில் கொரோனாவால் மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது.

நேற்று வரை மாநிலத்தில் மொத்தம் 8002 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 716 பேர் அதிகரித்து மொத்த எண்ணிக்கை 8718 ஆகி உள்ளது.

சென்னையில் நேற்று வரை 4372 ஆக இருந்த பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 510 உயர்ந்து 4882 ஐ எட்டி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று வரை 440 ஆக இருந்த பாதிப்பு இன்று 27 உயர்ந்து 467 ஆகி உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் 396 பேரும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 391 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத் தவிர விமான நிலைய தனிமையில் 4 பேர் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் நால்வரும் வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் ஆவார்கள்.

இன்று 83 பேர் குணமாகி இதுவரை மொத்தம் 2134 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்

தற்போது மொத்தம் 6520 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பூர், சிவகங்கை, ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் அனைவரும் குணம் அடைந்து கொரோனா இல்லாத மாவட்டம் ஆகி உள்ளன.

இன்று கொரோனாவால் 8 பேர் மரணம் அடைந்து இதுவரை 61 பேர் உயிர் இழந்துள்ளனர்.