சென்னை,

மிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறி உள்ளார்.

மறைந்த பிரதமர் இந்திராகாந்தியின் நூற்றாண்டு விழா மகளிர் காங்கிரஸ் சார்பில் திண்டுக்கல்லில் நடைபெற்றது.

விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த குஷ்பு, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்ல்லை. தமிழக  சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்றும்,  அதிமுக தற்போது மூன்று அணிகளாக பிரிந்துவிட்டதால் ஆட்சி பறிபோகும் சூழல் நிலவுவதாகவும் குறிப்பிட்டார்.

தமிழகத்தின் தற்போதைய நிலைக்கு பாரதியஜனதாவே காரணம் என்றும்,  தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் பாஜகவின் முயற்சி ஒருபோதும் நடக்காது என்றும் அவர் கூறினார்.

அதிமுக அணிகளின் போட்டி சூழல் இதேபோல் தொடர்ந்தால் அடுத்த 6 மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தலை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.