சென்னை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதவாக்கில்  சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.  இதன் காரணமாக தேர்தல் வியூகங்களை அரசியல் கட்சிகள் வகுத்து வருகின்றன. திமுக தரப்பில் தேர்தல் பிரசாரமும் தொடங்கப்பட்டு உள்ளது.  மேலும், தொகுதிப்பங்கீடு, கூட்டணி தொடர்பாகவும்,  அரசியல் கட்சிகள் ஆலோசனைகளை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் திமுக, அதிமுக உள்பட  தமிழகஅரசியல் கட்சிகள் தங்களது கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.

இந்த நிலையில், இன்று திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில்  நடைபெறுகிறது.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று காலை 10 மணிக்கு , திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக்கூட்டம், சென்னை – அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்.  உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.