சென்னை: சமூக அக்கரை உள்ள  கூடிய ஆன்மிகவாதியை நாடு இழந்து விட்டதாக காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி மறைவு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.

காஞ்சி சங்கரமடத்தின் மூத்த மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி இன்று காலை மூச்சுதிணறல் காரணமாக சங்கரமடம் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சைப்பலனின்றி ஜெயேந்திர உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த தமிழிசை சவுந்தரராஜன், “சமூக சிந்தனையுடன் கூடிய ஆன்மிகவாதியை நாடு இழந்து விட்டதாக”   இரங்கல் தெரிவித்துள்ளார்.